நீரை தேடிய பயணம்



அணைத்து அற்புதங்களையும் கொண்ட ஒரு அழகிய மலைக்காடு அதில் உயிர்வாழ்வதற்கு தேவையான அணைத்தும் அமைந்திருந்தன.  அதில் தென்றலை போல் விரிந்து படர்ந்து இருந்த ஆறுகளும் பச்ச பசேரென்று அழகிக மர செடி கொடிகளும் விரிந்து படர்ந்து இருந்தது .




              
அக்காட்டில் பலவகையான விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தது. சிங்கம் புலி மான் குரங்கு முயல் கரடி மாடுகளும்  ஆடுகளும் குதிரை ஓநாய்களும் கழுதைகளும் மயில் குயில் புறாக்களும் காக்கை குருவிகளும் கிளிகளும் கொக்குகளும் மற்றும் அனைத்து உயிரினங்களும் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தது.


இன்னிசை காலை தென்றழும் மெல்ல வருட மான் கூட்டங்களும் மயில்கூட்டங்களும்  மற்றும் அணைத்து குடும்பங்களும் மெல்ல விழித்தெள விடிந்தது முதல் காலைப்பொழுது  அணைத்து விலங்குகளும் தனது இலம் சிறுவயது  பிள்ளைகளுக்கு உணவை கொண்டுவர தன்குடும்பத்த்தோடு உணவுண்டு தென்றலைப் போல் விரிந்திருக்கும் ஆறுகளில் நீர் அருந்தி பசியாற்றினர் .


இன்னிசை தென்றலும்  வானத்தில் இருந்து விழுவதுபோல் காட்சியளிக்கும்  அழகிய அருவிகளில் பாயும் நீருடன் கலந்து காடெங்கும் மலைச்சரலைப் போல படர்ந்து வீசி கொண்டிருக்கும் வேளையில் அழகிய வண்ண மயில்களும் தன தோகையை  விரித்து ஆடிக்கொண்டிருக்கும் வேளையில் காட்டினுள் நுழைந்தார்கள் சிலர் .

அழகிய எழில்களும் முகில்களும் வசமிகு தென்றலும் இன்னிசையோடு வீசி கொண்டிருக்கும் அக்கட்டின் அழகை ரசிக ஆசை ஆசையாய் வந்தார்கள் சிலர். இயற்க்கை எழில்கொஞ்சும் அக்கட்டின்  அணைத்து சிறப்புகளையும் ரசிக்க  ஒரு நிலையில் அந்த ஆசை பேராசைகளாக மாற ஏற்பட்டது அக்காட்டின் முதல் அழிவு.

வானத்தையே எட்டி பிடிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும் அழகிய

மரங்களும் வாசமிகு மூலிகைகளும் எங்கும் காணக்கிடைக்க  அதை அடைய ஆசைப்பட்டார் சிலர். தன்கையில் இருந்த கோடரிகலால் வனையே எட்டிப்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்திருந்த மரங்களை வெட்ட தொடங்கினான்.

மரங்களும் செடி கொடிகளும் அளிக்கப்பட்டன அங்கு தன் குடும்பங்களோடு வாழ்ந்து வந்த மான் கூட்டங்களும் மயில் கூட்டங்களும் பறவை கூட்டங்களும் வாழ்வதற்கும் வசிப்பதர்க்கும்   மிகவும் சிரமப்பட்டன. சிலரின் ஆசை மேலும் பேராசையாக மாற மலைகளும் உடைக்கதொடங்கினான்  பறவைகளும் வாசிக்க இடம்மின்றி அக்காட்டை விட்டு பறந்து சென்றது.

சிலர் அங்கிருந்த விலங்குகளையும் வேட்டையாட விலங்குகளும் அழிந்தன. ஒருபக்கம் காட்டையளிக்க இன்னொருபக்கம் விலங்குகளையும் மலைகளையும் அளிக்கப்பட்டன. வானிலிருந்து விழுந்து காடெங்கும் பறந்து விரிந்து கிடந்த ஆறுகளும் வற்றிப்போக உயிர்தப்பிய ஒரு மான் தன் குடும்பத்த்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அக்காட்டை விட்டு தான் உயிர்வாழ நீரை தேடி சென்றது.

பேராசைகொண்ட சிலர் காட்டையளிக்க அங்கிருந்த உயிர்களும் உணவின்றி தவிக்க,  வசிக்க மரத்தைத்தேடி பரந்த பறவைக்கும்  தண்ணீரை தேடி ஓடிக்கொண்டிருக்கும்  மாணுக்கும் கிட்டுமோ நீர் ...?



நீரைத்தேடிய பயணம் .........















 

Comments

Popular posts from this blog

ஆஸ்த்துமா நிரந்தரமாக குணமடைய இதை செய்தல் போதும் / Doing this is enough to cure asthma permanently

காற்றும் மழையும் காதல் செய்ய